Kadhaiyilirundhu Kanitham Varai
Click Image for Gallery
பொது அறிவு, சமூக நீதி, நற்பண்புகளைக் கதைகள் மூலம் உணர்த்துவது போல
அறிவியல் சிந்தனைகளையும் கதைகள் மூலமாகக் கொண்டு சேர்க்கும் முயற்சிகள்
அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. அந்த வகையில் கணிதத்தையும் கதையாகச்
சொல்லும் முயற்சியில், ‘கதையில் கலந்த கணிதம்’ உள்ளிட்ட புத்தகங்களை
எழுதியவர் பேராசிரியர் இரா. சிவராமன். அவருடைய புதிய புத்தகம்,
‘கதையிலிருந்து கணிதம் வரை’ ’13’ என்ற எண் துரதிருஷ்டமாக நம்பப்படத்
தொடங்கியதற்குப் பின்னால் உள்ள இயேசு கிறிஸ்துவின் இறுதி உணவுக் காட்சி,
கிறிஸ்து காலத்துக்கு முன்பாகப் புனித எண்ணாக 13 கருதப்பட்ட
வரலாறு…இப்படிக் கணிதத்தைக் காலத்தோடும் வரலாற்றோடும் வெவ்வேறு கதைகளின்
ஊடாகப் பல கோணங்களில் விளக்குகிறது இப்புத்தகம்.
Product Info | |
Language | Tamil |
ISBN | 9788193206539 |
Total Pages | 160 |
Released | 26 April 2018 |